Skip to content

ஆதரவு இல்லை- கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011 உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தனக்கு இருந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி முழுமையாக வடிந்துவிட்டது. நான் விளையாட்டை ரசிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மேலும் அப்போது அணியில் எனக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று உணர்ந்தேன்.

error: Content is protected !!