நுகர் பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் நுகர்வோர்கள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 9000 கருணை ஓய்வதையும் வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியம் இல்லாததால் விவசாயிகளுக்காக தொடர்ந்து பாடுபட்டு வயது முதிர்வு காலத்தில் உயிர் வாழ அன்றாட உணவுக்கே மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் இந்த நிலையை அரசு உடனடியாக போக்கிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இல்லாத பட்சத்தில் வருகின்ற 10ம் தேதி தமிழக முழுவதிலும் இருந்து நுகர்வோர் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்கர் கூட்டமைப்பினர் சென்னை டி.என்.சி.எஸ்.சி தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.

