அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்துவதற்கே அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. வழக்கை எதிர்கொள்ள திமுக சட்டத்துறை தயாராக உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சி மீதான நற்பெயரை கெடுக்க சதி நடக்கிறது.

