சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் விழாவை ஒட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் வடமாநிலத்தவர் உள்பட 3 பார்வையாளர்கள் உயிரிழந்தனர்.

