Skip to content

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், இன்று மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.இன்று துவங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாய்ப்புக் கோரி பேசத் துவங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தும் அவர் திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேசி அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்ததாகவும்  கோட்டத் தலைவர் கண்ணியக்குறைவாக  பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் மேயரிடம்  தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டு  வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!