கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (37) இவர் தற்போது பொன் நகர் மிளகுபாறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன இவர் காதல் திருமணம் செய்து கொண்டவர் இந்த நிலையில் இவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி ஒழிப்பு நோய் காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்துசெசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

