வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்குமாறு அதிமுகவினருக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிர்வாக திறனற்ற திமுக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை கண்கூடாக கண்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்து விடாமல் தடுத்து நிறுத்துவோம் என்றும் EPS பேசினார்.
