தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணராஜா (20), அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவுக்கு பெண் வீட்டார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு… வாலிபர் தற்கொலை
