தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பதிவான தபால் வாக்குகள், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி, இன்று (ஏப்.28) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சிவஞானம் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
