புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆறு கிராமங்களைச் சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக்கோரி லட்சுமணன் என்பவர் வழக்கு.
தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தனர்.
