வறுத்தெடுக்கப்போகும் வெயில்..” இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் நிலவும் எனப் புதிய ஆய்வில் எச்சரிக்கை! விடுத்துள்ளது. மேலும் கூடுதலாக 20 முதல் 40 இரவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பத்துடன் காணப்படும் என்றும், கனமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் CEEW அமைப்பு கணிப்பு. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் |மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் மற்ற (பகுதிகளை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுத்தெடுக்கப்போகும் வெயில்… 40 நாட்கள் வரை கடும் வெப்பம்.. எச்சரிக்கை
