கீழடியில் நடந்து வரும் 11-ம் கட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 18 முதல் நடைபெறும் அகழ்வாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை செங்கல் கட்டுமானத்தின் உட்புறம் கிடைத்துள்ளதால், இப்பகுதியில் பண்டைய காலத்தில் சாயத் தொழிற்சாலை செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
