சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
வில்லிவாக்கத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம். காவல்நிலையத்தில் புகாரளிக்க வருவோரும், புகாரைப் பெறும் அதிகாரிகளும் வீடியோ பதிவு செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம். வில்லிவாக்கத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, அரசுப் பள்ளி திறக்க 10 நாளில் நிலம் கண்டறிய கேட்டுள்ளோம்.
