சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 6 நாட்களாக இன்று வரை நடந்தது.
இந்த ஆலோசனையின் முடிவில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக ஐகோர்ட்டின் நீதிபதிகள் 4 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோரை பதவி உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இன்று பரிந்துரை அளித்துள்ளது. இவர்களில் வழக்கறிஞர் மோகனா தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆவர்.
