திருச்சி தென்னூர் சாலையில் தனியார் ஓட்டல் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
