முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து 823 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்துள்ளது. கம்பம் பகுதி குடிநீர் தேவைக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 356 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
