நீட் (NEET-UG) மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரையின் பேரில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-ன் கீழ் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த முழுமையாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிந்த பிறகு பழைய பதிவுகளை மாற்றி “வினாத்தாள் முன்பே கசிந்தது” போன்ற போலி பிம்பங்களை உருவாக்கி மோசடி செய்வதைத் தடுக்க, ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியும் (Message-Editing Feature) ஜூன் 30-ஆம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது.
