திருச்சி மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மற்றும் விதிமீறல் வணிகப் பயன்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்த புகார்கள் எழுந்துள்ளன. திருச்சி திருவானைக்கோயில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றத்தை ஆய்வு செய்து, அந்த இடத்தை மீட்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தை உடனடியாக மூட வேண்டும் என்றும் அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
