பொள்ளாச்சி , கோவை சாலை சேரன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முன்பு புகைப்பட கலைஞர் சிவகுமார் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் கேமரா அதே பகுதியை சேர்ந்த ரமராஜ் என்பவர் விட்டியில் 4 பவுன் நகை திருட்டுப் போய் உள்ளது. மேலும் இன்னொரு வீட்டில் பூட்டை உடைத்து முயற்ச்சி நடைபெற்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு மகாலிங்கம்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமலைசாமி சேரன் நகர் பகுதியில்
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சில நபர்களை வைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி சென்றுள்ளார். இதைக் கேட்ட அந்த பகுதி திமுக வார்டு செயலாளர் சுரேஷ் தொலைபேசியில் அவரிடம் விசாரித்த பொழுது அந்த பகுதி மக்கள் அதிகப்படியானவரை வைத்து மீண்டும் கூட்டம் நடத்த கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மகாலிங்க புரம் உதவி ஆய்வாளர் திருமலைசாமி ஒருமையில் பேசி உள்ளார். இதனை கண்டிக்கும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் 100 க்கு மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்