திருமங்கலம், திமுக நிர்வாகி கலாநிதியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை கைது செய்யக் கோரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் கைவிடப்பட்டது. இரு சக்கரவாகனத்தில் கலாநிதி சென்றபோது காரில் வந்த கும்பல் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் அஜித் என்பவர் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
