திருச்சி பீமநகர் பகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சிரஞ்சீவி என்பவர், நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவருக்கு நீதிபதி, கைது ஆணை பிறப்பித்தார். தொடர்ந்து கோர்ட் விசாரணை அருகில் அமர வைக்கப்பட்டிருந்த சிரஞ்சீவி திடீரென அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
