வேலூர் பேரணாம்பட்டு அருகே, மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் விஜயகுமார் (48) மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன தனலட்சுமி (36) என்பவருக்கு, குமரேசன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்தபோது, தனலட்சுமி அவரை அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனலட்சுமியை கொன்று உடலை மறைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
