நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சோபி டிவைன், தனது 20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனது சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது குடும்பத்தினரும் தனது கடைசி சர்வதேச போட்டியை நேரில் கண்டது மறக்க முடியாத தருணம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். உலக அரங்கில் நியூசிலாந்து நாட்டிற்காக விளையாடியது பெருமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோபி டிவைன் ஓய்வு: 20 ஆண்டு கிரிக்கெட் பயணம் நிறைவு
