திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14,17 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனிவாரா ஆஸ்தானத்தை ஒட்டி 14ம் தேதி கோவிலை சுத்தம் செய்து திருமஞ்சனம் நடைபெறும். 17ம் தேதி அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை நடைபெறாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
