ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 15 வயது பேத்தியை அவரது 73 வயது தாத்தா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 3 மாத கர்ப்பமாக உள்ள சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உண்மை தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் அளித்த புகாரின் பேரில், தாத்தாவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
