கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் அரசுப்பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலை செய்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:தமிழகம்