பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “கோடி கோடியாகச் சம்பாதித்த விஜய் தனது சொந்தப் பணத்தில் இருந்து தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே? அதை வைத்தே அந்தக் குடும்பங்கள் நன்றாக வாழ்ந்திருக்குமே? அதை விடுத்து, கடைத் தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல் அரசுப் பணியைக் கொடுத்துள்ளார்” என்றார்.
