விருதுநகர் மாவட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதுகாப்பு விதிகளை மீறிய 82 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றாத ஆலைகள் மீது இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து
