கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கடித்ததில் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டில் இருந்து வந்த தேனீக்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கடித்தன. தேனீக்கள் துரத்தி கடித்ததும் மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் வேப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
