போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. டீசல் லிட்டருக்கு ₹8.5-லிருந்து ரூ.15.5 ஆகவும், விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.7.5-லிருந்து ரூ.14.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.4-லிருந்து ரூ.2.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
