மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது வந்த நிம்திதா-கட்வா பயணிகள் ரயில் அதன் மீது மோதியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், 2 மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
