தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தனித்தனியாக கிடந்த தலை மற்றும் உடலை போலீசார் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
