மும்பை BKC-யில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கும் ‘குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்’ அரங்கில், தன்னை PMO அதிகாரி எனக் கூறிக்கொண்ட 24 வயது ரோஹன் பரேக் என்பவர் போலி அடையாள அட்டையுடன் பிடிபட்டார். அவருடன் துப்பாக்கியுடன் வந்த பாதுகாவலரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
