கர்நாடகா மாநிலம் தாவணகெரே நெடுஞ்சாலையில் கார் மோதிப் படுகாயமடைந்த சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அது முழுமையாக மயக்கமடைவதற்கு முன்பாக திடீரென வனத்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியது. பின்னர் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
