ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்ல உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை சிபிஐ மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
