சென்னை: மாணவர்கள் மீதான தடியடி, ஒன்றிய அரசின் தோல்வியையே காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வியை பயிற்சி மையங்கள் அர்த்தமற்றதாக்கிவிட்டன. தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் முறைகேடாக பறிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தை சோனம் வாங்சுக் கைவிட வேண்டும் அவரது சேவை நாட்டுக்கு தேவை என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
