கூட்டுறவுத்துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2026-27 ஆம் ஆண்டில் 14.07.2026 வரை 92 உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி பயிர் கடனும், 455 உறுப்பினர்களுக்கு ரூ.2.37 கோடி கால்நடை பராமரிப்பு கடனும் என ரூ.3.42 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
