சென்னை அடையாறில் உள்ள தனியார் வங்கியின் மேலாளரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிக்கு சென்றபோது மின்தூக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கோரிய போது மேலாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கயல்விழி, மேலாளரை தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
