தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோட்டில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50), கடந்த 2 ஆண்டுகளாக மனநல பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார். நேற்று இரவு இட்லி கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது, பின்னோக்கி வந்த வெள்ளை நிற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி
