குஜராத் மாநிலம் வடோதராவின் தண்டல்ஜா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் ஈரமாக இருந்த சாலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தது. ஸ்கூட்டரில் 3

இளம்பெண்கள் சென்றபோது, திடீரென வாகனம் சறுக்கியதில் அனைவரும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ரோடு ரோலர் வாகனம் ஒரு பெண் மீது ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரு பெண்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
