ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் அரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். முள்ளுவாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சஞ்சய் (25), ரூபின் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
