தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளார்கள். நெல் மூட்டைகளை பாதுகாக்க திட்டம் இல்லை. தமிழ்நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும். விவசாயிகள் எதிர்பார்த்த எந்த அறிவிப்புகளும் இல்லை என குற்றம்சாட்டினார்.
தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல…. பிரேமலதா சாடல்
