பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரில், பங்குச்சந்தை நிபுணரும், தொழிலதிபருமான பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிஆர்.சுந்தரை காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து இன்று கைது செய்துள்ளனர். பிஆர்.சுந்தர் பங்குச்சந்தை தொடர்பான பயிற்சிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
