தருமபுரி: தொப்பூர் அருகே அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் செந்தாமரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலின்போது வாக்குச்சாவடி மையத்திற்கு கழிவறை செல்லும் வழியில் தற்காலிக மின் இணைப்பு தந்துள்ளனர். கழிவறையில் மின் ஒயர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளன.
