திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் மீன்பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனுதாரர்கள் அனைவரும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
அமோனியா வாயு கசிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
