திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த அக்னி வீரர் நந்தா(23), லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடும் பனிப்பொழிவு காரணமாக உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு ராணுவ வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
