தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.7) மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
