மகாராஷ்டிரா-பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்த விவசாயி மல்லேஷ் தேபேகரின் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டிற்குள் இருந்த அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருக்க மல்லேஷ் பகலில் பூச்சிமருந்து தெளித்துள்ளார். இதையடுத்து இரவில் ஆரோகி (6), ஆராத்யா(4) என்ற சிறுமிகள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.
