தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி பெண் எம்எல்ஏக்களின் பேச்சுகள் கவனம் பெற்றுள்ளன. பிரேமலதாவின் சரவெடி பேச்சுக்களை ஆளும் தரப்பு மிக கவனமாக எதிர்கொள்கிறது. மறுபுறம் குறிப்புகள் எதுவுமின்றி தரவுகளுடன் வாதங்களை அடுக்கும் சௌமியா அன்புமணியின் பேச்சை முதல்வர் விஜய்யே கூர்ந்து கவனிக்கிறார். இந்நிலையில், தவெகவை எதிர்கொள்ள கனிமொழியை மாநில அரசியலுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற பேச்சு திமுகவினரிடம் எழுந்துள்ளது.
