ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து தவெக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் முதல்வர் பற்றி ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
